நிழலில்த் தேடிய நிஜம்: ஷஹி சாதிக்
By கவிதைமணி | Published on : 07th April 2018 04:29 PM | அ+அ அ- |
நினைவுகள் உனதாகலாம்,
நினைத்துனை பிணியாவது
நானல்லவா...
நினைத்துனை பிணியாவது
நானல்லவா...
கனவுகள் சுகமாகலாம்
கண்ணிலே கனியாவது
தீயல்லவா!
கண்ணிலே கனியாவது
தீயல்லவா!
என்னிலே நீயாகலாம்
உன்னிலே நானாகும்
நிமிடம் எதோ?
உன்னிலே நானாகும்
நிமிடம் எதோ?
ஆழியே பனியாகலாம்-என்
ஆழ் மூச்சிலே
தாபமே!
ஆழ் மூச்சிலே
தாபமே!
நீயெனும் காட்டுத்தீ
நிலமெலாம் பரவிவிட்டாய்,
நீத்துவிட்டேன் நானே...
நிலமெலாம் பரவிவிட்டாய்,
நீத்துவிட்டேன் நானே...
நீயெனில் உயிர் வளர்ந்தாய்.
நீ
நிழல் வாழ்கிற
நிஜம்.
நீ
நிழல் வாழ்கிற
நிஜம்.