Monday, 21 August 2017

என்ன தவம் செய்தேன்: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 20th August 2017 06:16 PM  |   அ+அ அ-   |  
உள்ளமெலாம் ஆளும்
செல்லம் உனை காணும்
செல்வமதை ஆழ
செய்ததென்ன தவம் நான்?
வண்ண மலர்
வாடும்
கண்கள் அலர்
காலம்
உன்னை மலர்,
நானும்
என்னில் நுதல்
சாயும்
கண்மணி என்
நீயும்,
கலந்த நாழி
பேறும்!
மிதக்கும் அன்பில்
நடக்கிறோமே,
எத்தவத்தில் பிறந்த வர
மிதன்பே?
நுரைக்கும் இதயம்
இணைக்கும் எங்கள்
நரைக்காத ஆத்ம பாசம்
இரைஞ்சாமல் பெற்ற
இன்பம் , என்ன் செய்வேன்??
மயக்கமுற்றேன்!
தொலை தூரம்
தொடும் பாசம்
விலை இல்லா
விரி    பவளம்
அது -ஒரு
திருப் பாற்க்கடல்!
தினம் உண்டாலும்
தித்திப்பு மாறாது,
திண்டாட்ட மயக்கம்...
நனைந்துகொண்ட குளிரில்
நலுவிடாமல் பிடித்துக்கொண்டேன்
பழமே!
மழை உன்னைக் கரைத்துவிட்டால்
மரித்துப் போகுமென்றது -என்
சுவாசக்குழல்!
குடிக்கும் ஒவ்வோர்
சொட்டும்
கடந்திடாது மிதிக்காமல்
என்
காதல் நரம்பை!
கவிதையின் சிறப்பணி நீ!
ஆனந்த மழலை
இராகம்,
ஆகாய நிலவின்
உலாபோல்,
வாடாத மலருன்
வதனம்;
தீராத அன்பில்
புரலும்
திவ்வியக் கட்டில் -நீ
எனக்கு...

No comments:

Post a Comment