கொண்டாடப்படும் தினங்கள்: -ஷஹி ஸாதிக்
By கவிதைமணி | Published on : 25th December 2017 07:08 PM | அ+அ அ- |
ஒவ்வொருவர் பெயருக்காக
ஒதுக்கப்பட்ட நாட்காட்டி.
இவ்வளவு நாட்கள்
ஓராண்டில்,ஆனாலும்,
இறந்து கிடக்கின்ற
இவள் வரலாறு!
ஒதுக்கப்பட்ட நாட்காட்டி.
இவ்வளவு நாட்கள்
ஓராண்டில்,ஆனாலும்,
இறந்து கிடக்கின்ற
இவள் வரலாறு!
துறத்திக்கொண்டு தான்
தூரங்களைக் கடக்கிறேன்!
தூரங்களைக் கடக்கிறேன்!
தூரிகை பழையது,
முடிகொட்டுகிறது வயதாகியதால்!
துகள் பூக்க ஆரம்பித்துவிட்டது
முடிக்கப்படமுன்னரே ஓவியங்களில்!
முடிகொட்டுகிறது வயதாகியதால்!
துகள் பூக்க ஆரம்பித்துவிட்டது
முடிக்கப்படமுன்னரே ஓவியங்களில்!
தூசி தட்டப்படாமலேயே
யாசித்திருக்கிறது...
துரத்திப்பிடித்து
யன்னல்த் திறக்க
ஒரு ஒளி ;ஒரு சாவி;ஒரு தென்றலேனும்...?
யாசித்திருக்கிறது...
துரத்திப்பிடித்து
யன்னல்த் திறக்க
ஒரு ஒளி ;ஒரு சாவி;ஒரு தென்றலேனும்...?
என் வரலாறு,
இன்னுமே பூட்டிவைக்கப்பட்டு...!
என் பாதைகளெங்கும் தடயமழிக்கப்பட்டு!
இவள் ஜனனம்
என்பதே புதைந்து வாழ்ந்துகொண்டு...!
இன்னுமே பூட்டிவைக்கப்பட்டு...!
என் பாதைகளெங்கும் தடயமழிக்கப்பட்டு!
இவள் ஜனனம்
என்பதே புதைந்து வாழ்ந்துகொண்டு...!
ஒரு
நாளைக் கைப்பற்றி
அதில்
நானும் பெயரெழுதி
திரு
நாளெனக் கொண்டாட,
புது தினம் ஒன்று
நான் கேட்பேன்...
நாளைக் கைப்பற்றி
அதில்
நானும் பெயரெழுதி
திரு
நாளெனக் கொண்டாட,
புது தினம் ஒன்று
நான் கேட்பேன்...
என்
பெண்மைக்கோர்
பெயர் கொண்டு,
உயர்
உயில் ஒன்று வேண்டும்!
பெண்மைக்கோர்
பெயர் கொண்டு,
உயர்
உயில் ஒன்று வேண்டும்!
எனக்கே
உரித்தான
உரிமைகள்
உரித்துக்காட்ட;
சிறுமையில்லாப்
பெருமை வேண்டும்!
உரித்தான
உரிமைகள்
உரித்துக்காட்ட;
சிறுமையில்லாப்
பெருமை வேண்டும்!
பாரதியின்
புதுமைப்
பெண்,
பாதங்கள்
பதிந்த ஏடுகள்
நாட்களைக்
காட்டி
நிலைக்கை வேண்டும்!
புதுமைப்
பெண்,
பாதங்கள்
பதிந்த ஏடுகள்
நாட்களைக்
காட்டி
நிலைக்கை வேண்டும்!
தீண்டாமை
தீப்பற்றி,
நீறாக வேண்டும்!
தீமைகள் எதிர்க்கின்ற
உரிமைகள் கொண்டு
பெண்மைக்கு உயிர்வாழ
நாட்க்காட்டி வேண்டும்!
தீப்பற்றி,
நீறாக வேண்டும்!
தீமைகள் எதிர்க்கின்ற
உரிமைகள் கொண்டு
பெண்மைக்கு உயிர்வாழ
நாட்க்காட்டி வேண்டும்!
அச்சுப் பதித்த
எழுத்தில் மட்டும் தங்கும்
நிச்சயமற்ற
நிழல்ப் படம் அல்ல!
நிகரே இல்லாப் பெண்மையின்
நிலைக்கும் வாழ்க்கை வேண்டும்!
எழுத்தில் மட்டும் தங்கும்
நிச்சயமற்ற
நிழல்ப் படம் அல்ல!
நிகரே இல்லாப் பெண்மையின்
நிலைக்கும் வாழ்க்கை வேண்டும்!