Sunday, 17 December 2017

பெண் எனும் பிரபஞ்சம்.
  அவளுக்குள் மிதக்கின்றன
பருவங்கள்.
 
பிறக்க முன்னும்
கண்
திறக்க முன்னும்
இறக்க முன்னும்
மறக்கா பெண்மை!
முளை
விடும் ஒரு
தளிர்
விதை அறுத்துக்கொண்டு,
தடுக்காத தாய்மை அங்கு
பொறுத்திருக்கும்!
சேய் உயர்ந்தெழத் தன்னில்.
ஒரு துணிக்கை
உயிர்த் தரிக்க
பிறப்பாள் மறுபடி
இறந்து உயிர்த்து!
நிலவுக்கு இணை,
பல முகத்தில்ப் பெண்மை.
என்ப்புழமையும்
எழுதாத பன்மை,
நிழல் இல்லாமல்
நிற்கின்ற பெண்மை!
உயிர்ப்பெற்றவள்
உலகம் உதித்தது!
உயிர்க் குடித்திந்த
உலகம் உதிர்த்துது!
உதிரம் அவள்
உரமாய் மாறுது!
மரம் ஒவ்வொன்றும்
பலமாய்த்தான்
நிற்குது.
அழகு மலர்களைக்
கசக்கும் உலகம்!
அது இறக்கவும் இல்லை!
மறுபடி பிறப்பதும் இல்லை!
எதற்க்கென வாழும் வாழ்க்கை...
வாடியே கழிக்கவா
வாழ்க்கை?
பூமியைக் கையால்
தாங்குகிறாள்,
பூக்களெல்லாம்
தலை கொய்யப்படுகின்றன!
நுரைக்கின்ற பாசம்!
கடல் அவள் மனமாகும்.
வீழும் அதன் ஆழம்
கரம் பிடித்த அவள் ஸ்நேகம்.
கதறும் துளியிலும்
தாகம் தீர்க்கும்
உதறும் இவ்வுலகம்!
தாறுமாறாய்
கிழித்துத் தீர்த்து
நாருரிக்கப்படும்
கீழ்மை!
அவளில் பிரிந்து
உயிர்ப் பெற்று,
அவளை மிதித்தே
பலம் பெற்று,
அவளின் மடியில்
இடம் பெற்று,
அவளை மட்டும்
ஏன் தூற்ற?
முழுவதும் அவளிடம்
எடுத்து,
முடிவிலும் அவளுடன்
கழித்து,
முழுவதும் அவள்
பிழிந்தெடுத்து,
எதுவுமே இல்லை
அவளின்றி,
என்றான நம்
வாழ்க்கை.

shahi sadique

No comments:

Post a Comment