Monday, 4 December 2017

விடையில்லா விடுகதை: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 04th December 2017 06:47 PM  |   அ+அ அ-   |  
சேலைத் தலைப்பில் 
போர்த்தப்பட்ட நாட்குறிப்பேடு;அவள்
சேகரித்த எண்ணங்களின் இருதயம்
அது!
பின்னலிடை கூந்தல்
கொண்ட சிக்கல் எல்லாம்,
பிறப்பிலேயே எழுதப்பட்ட
பின் விளைவோ...!? $:--
ஒரு
திறக்க(வே) படா
டயரியின் சொந்தக்காரி...
அவள்.
அடுக்கடுக்காய்க் 
காய்ந்து போன 
ஆசைகளின் மையெச்சங்கள்!
புத்தகம் இன்னுமே திறக்கப்படாமல்!
வெட்கப் பூட்டுப் போட்ட
பெண்ணின் விரல் நுணிகள்!
வெறுமனே வரண்டுகொண்டு...
பாவையவள் வெறும் மரப்
பாவை தானோ?
பார்வையவள் மற்றவர்
பார்வைக்குள் தானோ?
பாதைகள் பல
பார்த்திடலின் ஆவல்
பாதியவள் மீதி பிறர்
பாதையில் ஒரு வாழ்க்கை!
அறமோ ?முறையோ?
ஒரு 
சந்தனக் காடு
அஞ்சனம் கரைந்தே
நிரந்தரம் இழந்தது!
நெஞ்ச வியர்வை
நிரப்பி வடித்தது!
பெண்ணின் மெளன
எண்ணம், 
கண்கள் படா .
சேலைகளால் உரிஞ்சப்பட்டு...
விரல் நுணிகளின் 
விவரங்கள் யாரறிவார்?
திரள் உருண்டைப் பிண்டமல்ல,
அவளும் ஒன்றும்.
சுவர்ப் பல்லி,
கதவு யன்னல்,
சுற்றியுள்ள சொந்தங்கள்...
சுற்றிலும்
 குற்றமே காணும் 
சுட்டிடும் பார்வை கொண்டோர்!
சிரிப்பதற்கோர் கண்ணாடி,
கழிப்பதற்கோர்க் கட்டில் மட்டும்
சிறைப்பட்ட உணர்ச்சியெல்லாம்
கருமையின் இரா மறைப்பு.
மலராத ஒரு
மொட்டு,
பிரித்து திறக்கப்படும் வரையா
காத்திருப்பு?
பொகுட்டு விரிக்கும்
இரும்புக் கரங்களின்
இறுக்கப்பிடிகளுக்குள்
கசங்கி வாழ!
மலராமலே கருகிப் 
போகும்,
மரத்துண்டா இவள்
எதிர்காலம்?

No comments:

Post a Comment