Sunday, 26 November 2017

என் முதல்க் கனவு: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 26th November 2017 05:25 PM  |   அ+அ அ-   |  
கண் திறந்துகொண்ட
யெளவனன்,
வின் திறந்து பறக்க
யெத்தனித்த
கண் மறைத்த முதல்க் கனாவு
யென்-
மூச்சு 
முட்ட
கிறுக்கப்பட்ட 
புத்தகங்கள் பாவம்!
கிள்ளி எடுத்து உயிர்ப் பறித்த
பூக்களும் தான் பாவம்!
கனவை எழுதக்
கரைந்து போன
எழுதுகோல்கள்
ஏராளம்!
கடித்துக் கொறித்து
பதற்றம் தணித்த
ஒடிந்த விரல் நகங்கள்-என்
பதினெட்டைப் 
பதம் பார்த்திருந்தது
இராப்
பூத்த கானல் நெருங்கி
வராமல்!
அந்தோ,
சூரியன் பிழிந்தெடுத்து
வந்தே 
ஆறிடக் குடித்துவிட்டு,
இந்த
வானத்தை மடித்துப் போட்டு-மி-
தந்த
வான்மேகம் தலைக்கெடுத்து
இந்தப் 
பூலோகப் பூதங்கள் சேர்த்து
நந்த வனமெல்லாம்
பூட்டுப் போட்டு
எந்தன் கனாவின் உயிர்ப்
புனைந்தேன்!
பூத்த புதுக்
கினா
புதைத்த சாலைகள் பல
வினா!
யதார்த்தம் கடனெடுத்து
பதார்த்தம் புதிதாய் இணைத்து
யுகமெல்லாம் மைகொண்டு
பதனிட்டு,
யுத்தத்தின் தூசி கொண்டு 
வீரத்தின் நாசி கொய்து
சத்தத்தின் பேச்சு பிடித்து
முத்தத்தில் வீச்சு கணித்து
மொத்ததில் பீய்ச்சிய கனா!
என்
யெளவனக் கொடியில்
எண்ணில்லா மலர்கள்!
யெகமெல்லாம் மிதக்கச்செய்து
அகமிரண்டும் ஒன்றிக்க
நேரம் கெதாயுவானாலும்
முகமிரண்டும் ஒன்றாகிப்போன
தூரத்தில் கனா,
காலத்தில்ப் பொருத்திப் பார்க்க
தூரிகையில் மை மறந்தேன்!

ரத்தத்தில் பூக்கின்ற

றக்கை கொண்ட பூக்கள்,
இம்
மாசி நூவணிந்து

மை மறைத்த கனா!
இஞ்ஞானம் பெற்று
ஒரு
இச்சையுள் புத்தன்,
கிடந்தவிடம்
மணமல்லிகை மரம்.
விடக்காந்தருவ 
மனம் 
விடாது பிடித்த முதல்க்
கனா!
மாயை மலர்
மலர்ந்து
மார்பினில் மகரந்தம்
உரைந்து
கேசாதிபாதம் நகர்ந்த
உருளை வண்டுப்
பார்வைக்கூர்முள் 
பாதை  வழி 
பார்க்க
பாதம் மிதக்க
பால்யம் மிகைத்த
எதிர்பார்ப்புக் கருவி அது!
கண் திறந்து 
கண்டுகொண்டு
கண்ணை மறந்து
உன்னை வரைந்து
மின்னல்கள் பிடித்து 
வண்ணம் தீட்டி
புண்ணில்லாமல் வடித்த
உன் உருவம்!
கண்ணிலேவைத்திருந்த
கவிதையெல்லாம் 
கோர்த்து அணிவிக்க
மாலையானது.
கோர்த்து வைத்த 
வார்த்தையெல்லாம்
சோர்ந்து போய்க் 
கனாவைக் கடக்காமல்!
இந்திய வங்காள
எல்லை போல
எந்தனொரு மொழி
எட்டிப் பார்த்தது!
சருகுகள் 
சரசரப்பில்
சலைக்காமல் உன்
பாதத் தேடல்.
சுகந்தங்கள் 
சஞ்சரித்தால்
சுந்தரத்தின் 
சன்னிதி கோரல்.
இன்னிசை 
பாவிசைத்தால்
இன்பவள்
கண்ணசைதலோ பாடல்?
என ,
எண்ணியே
என்னகக் காதல்!
முதல்க் கனா
முற்றிப் போக,
இதழெலாம் 
இற்றைக்கும்
மிதக்கின்ற
மிறைக்கா 
மித்தைக் கனா!
என்றுமே
உருவம்
ஊன்றவில்லை!
உயிரென
எதுவும் 
தோன்றவில்லை!

No comments:

Post a Comment