கண்ணால் காண்பதும்: -ஷஹீ ஸாதிக்
By கவிதைமணி | Published on : 27th August 2017 03:44 PM | அ+அ அ- |
காண்பவை மாறிடும்;
மீண்டிடும், மாட்டிக்கொண்ட
மின்னலின் வானத்தில்...
மீண்டிடும், மாட்டிக்கொண்ட
மின்னலின் வானத்தில்...
காட்சிக்குள்
ஆட்சி செய்கிற
காஞ்சனை
கானலாக...
ஆட்சி செய்கிற
காஞ்சனை
கானலாக...
காற்றின் கீரலில்
கசியும் காட்சிகள்...
மழுங்கலற சிறையுள்.
வண்ணம் கசிகின்ற
கண்மணி !
கசியும் காட்சிகள்...
மழுங்கலற சிறையுள்.
வண்ணம் கசிகின்ற
கண்மணி !
வண்ணம் கசிந்து,
வண்ணம் கசிந்து
கண்மணி கசிந்து
வண்ணம் நசிய!!
வண்ணம் கசிந்து
கண்மணி கசிந்து
வண்ணம் நசிய!!
உரு மாறி ,
உறு மாரி கண்ணில்...
உரு மாறிய
உயிர்க் காதல்
உளரலாய் என்னுள்!!
உறு மாரி கண்ணில்...
உரு மாறிய
உயிர்க் காதல்
உளரலாய் என்னுள்!!
உதிர்த்து சென்ற -அவள்
உயிர்த்தடம் காண்கின்றேன்...!!!
உருவம் கடத்திக்கொண்ட
ஏமாற்றத்தில் அவள் சரணம்.
அருவம் ஆகிப்போனது
ஏகாந்தம் பூத்த -என்
மலர் வனம்....
உயிர்த்தடம் காண்கின்றேன்...!!!
உருவம் கடத்திக்கொண்ட
ஏமாற்றத்தில் அவள் சரணம்.
அருவம் ஆகிப்போனது
ஏகாந்தம் பூத்த -என்
மலர் வனம்....
கண்களில் மலர்களுக்கு
நிறக் குறிப்பில்லை.
காண என் வனத்தில் மலரும்
பிறக்கவில்லை !
நிறக் குறிப்பில்லை.
காண என் வனத்தில் மலரும்
பிறக்கவில்லை !
நிறப் பூச்சிகள்
நித்தம் பறந்த -நான்
போக்கிய பொழுதுகள்;
சத்தம் இல்லாமல்
போர்த்தப்பட்டன.
அவள்
சரித்து வீழ்த்திய
மணல் மாளிகை.
நித்தம் பறந்த -நான்
போக்கிய பொழுதுகள்;
சத்தம் இல்லாமல்
போர்த்தப்பட்டன.
அவள்
சரித்து வீழ்த்திய
மணல் மாளிகை.
திரும்பியே பார்க்காத
நெருங்கியிருந்த
திவ்விய தருணங்கள்;
திருடிச் சென்றவள்
திரும்ப என் கண்களில்!!!
வண்ணம் இழந்த
இரு கண்களிலும்
இன்னும் காண்பதும்
மின்னும் அவள் முகம்...
நெருங்கியிருந்த
திவ்விய தருணங்கள்;
திருடிச் சென்றவள்
திரும்ப என் கண்களில்!!!
வண்ணம் இழந்த
இரு கண்களிலும்
இன்னும் காண்பதும்
மின்னும் அவள் முகம்...
வண்ணமிழந்து
வடிவம் சரிந்த,
கண்களுக்குள்
படிவம்...
என்
காபன் கக்கும்
கண்ணின்
தபித்தலின் காட்சி!!!
வடிவம் சரிந்த,
கண்களுக்குள்
படிவம்...
என்
காபன் கக்கும்
கண்ணின்
தபித்தலின் காட்சி!!!