Sunday, 17 December 2017


மனத்திற்கிட்ட கட்டளை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th December 2017 01:52 PM  |   அ+அ அ-   |  
மனதிலே மொய்க்கும்
மன்மத வில்,
என்னை
மலர்களால் தாக்கும்
காதலியே...!
பார்க்கின்ற கண்ணைப் 
பார்க்காதே என்று சொல்லி,
கேட்கின்ற காதை
ஏற்காதே என்று மூடி,
தோற்றுவிட்டாய் என்ற எண்ணம்
ஊட்டிவிட்டேன் மனதுக்குள்!
தோண்டிப் பாய்கிறதே
உயிர் மின்சாரம்!
நெடுந் தொலைவில் நான்
நடந்தேன் 
நீ தொலைத்த பாதை
நெருடா...
உன் கண்களெனும் கேமராவின்
இருண்ட
பக்கங்களில்.
சூரியன் எதிர்த்
திசை
சிறிதேனும் 
தொட்டிடாமல்
சுழன்றவனானேன் நானும்
தொடர்ந்து ,
உன் நிழல் 
மிதிக்காது 
என் பகலை!
யன்னல் கம்பிகள்
உடைத்துப் போட்டேன்
உன் குரல் அதற்க்குள்
உலவாதிருக்க!
பின்னல் பாய்கள்
அவிழ்த்துப் போட்டேன்
பிரிந்தே போகும்
தூக்கம் மீட்க்க!
ஆனாலும்,
மொய்த்துக்கொண்ட 
அம்புகளெல்லாம்
கொய்துவிட்ட என் மொத்த
அசைவுகள்!
நான் தொலைந்தேன்
நீ எனக்குள்!
கான்பதெலாம்
நிஜமில் புதுமை...
போட்டோஷோப்பில் பல முறை
நுழைந்தேன்!
தீ எரிந்து
எண்ணை ஊற்ற
திருட்டு அனங்கன்
ஏவிவிட்டாயோ?
பொன் ஏட்டில்
ப்ரோக்ரேம் எழுதி
என் ஹாட்டில்
பதித்துவிட்டாயோ?
பித்துப் 
பிடித்து
பித்தளைத் தட்டாய்
சத்தம் போடுதடி
சிரசு!
நீ இட்ட
கமான்ட் எல்லாம்
நிற்காது ஓடுது 
என்னில்!
வைரஸ் அழிக்க
விருப்பமில்லை,
விஸா பெற்ற
விஷமி நீயல்லோ!
விரும்பியே நானும்
கைதியானேன்!
விரும்பவே செய்தது
கைது செய்தல்லோ!
என் மனதைக்
கைப்பற்றி விலங்கிட்ட
சைபர் போலிஸ்!
லொக் இன் ஆனவன்
பாஸ்வர்டை மறந்துவிட்டேன்!
தூக்கத்திலும் குக்கீஸ்
பரப்பும்,
டேட்டாக் கொள்ளைக்காரி!
அட்மினே ஆகிவிட்டாய்
சிஸ்டம் எல்லாம்
அரசு செய்யும்!

No comments:

Post a Comment