Saturday, 6 January 2018

வீணையின் நாதம்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 06th January 2018 04:29 PM  |   அ+அ அ-   |  
தனிமையில் ஓதும்  
ஒருமையின் பாடல்!
தலைவியின் காதில்
ஒலிக்காதோ ?
வருத்தத்தில் வாடும்
மனததன் குமுறல்
வீணையின் நாதம் ஆகாதோ?
மனமே இனிக்காதோ...?
பாடும் வீணையின்
தேடல் என்னவோ?
நாடும் இன்பமே
தீராதோ?
பெண்ணின் நடையெண்ணி
வீணைக் கூந்தல் வருட
கண்ணின் துளி கொல்லும்
கவிதை அந்த சங்கீதம்!
வின்னும் மண் தொடுகின்ற
மின்னும் சங்கமத் துளி
வின்கதிர் ஆகிடும்
மனங்களின் நடுவிலே..
அது,
கனவு தேசத்தின்
கடிவாளம்.
பிடித்து நடந்தால்,
மிதித்து செல்லும் மாய
லோகம்!
நான்
ஓடி
ஓய்ந்திடும் புல்லி மான்.
ஒரு முறையல்ல;
ஓராயிரம் பால்க் கடல்
உரிஞ்சித் தீர்த்த 
பெருமிதம் போலந்த
வீணையில்
வீழ்ந்தவன்!
அந்த 
சிரிப்பொலி,குரல் மொழி
நாதத்தில் அவள்
சுருதி...
இனிக்கின்றது...

No comments:

Post a Comment