நிலைக்கும் என்றே: ஷஹீ ஸாதிக்
By கவிதைமணி | Published on : 03rd September 2017 05:04 PM | அ+அ அ- |
ஓடுகிறது நதி.
பிறக்கிறது நேரம்.
முளைக்கிறது வயது...
பிறக்கிறது நேரம்.
முளைக்கிறது வயது...
பாதை வெட்டிக்கொண்டு
சுயமாக.
எட்டிப்பிடிக்கப் பார்க்கிறது
துணிக்கை நீர்,
கடந்திட முன் காலத்தை.
கடத்திட முன் காலத்தை
முதிர்வினை
அடக்கிடப் பார்க்கும்
கனவு.
சுயமாக.
எட்டிப்பிடிக்கப் பார்க்கிறது
துணிக்கை நீர்,
கடந்திட முன் காலத்தை.
கடத்திட முன் காலத்தை
முதிர்வினை
அடக்கிடப் பார்க்கும்
கனவு.
பருத்துப் போன கனவு
மூளைக்குள் முளைத்து,
முருக்கேறித் துளைக்கிறது,
யெளவனம் எழுந்து
துடிக்கிறது!!
அந்த
மத்திய இடைவெளியில்
மார்புகளின்...
வாய்க்குள் புகுந்த
சாத்தான்!
உள்ளிருந்து தப்பித்திடும்
முயற்சி.
இன்னும் இருக்கிறது என்றே
இழுத்துக்கொண்ட முன்னேறல்.
மூளைக்குள் முளைத்து,
முருக்கேறித் துளைக்கிறது,
யெளவனம் எழுந்து
துடிக்கிறது!!
அந்த
மத்திய இடைவெளியில்
மார்புகளின்...
வாய்க்குள் புகுந்த
சாத்தான்!
உள்ளிருந்து தப்பித்திடும்
முயற்சி.
இன்னும் இருக்கிறது என்றே
இழுத்துக்கொண்ட முன்னேறல்.
"இன்னும் இருக்கின்றது" என்றுகொண்டே
இலாஸ்டினைக் குத்தித் தவிக்கும்
உடலுக்குள் சாத்தான்.
இலாஸ்டினைக் குத்தித் தவிக்கும்
உடலுக்குள் சாத்தான்.
கிழக்குக் கரைப் பிறப்பும்
மேற்குக் கரை இறப்பும்
பசுமைப் புரட்சி.
இருள்த் திரவத்துள்
சுருண்டு துடிக்கிறது
இதய அப்பிள்.
மேற்குக் கரை இறப்பும்
பசுமைப் புரட்சி.
இருள்த் திரவத்துள்
சுருண்டு துடிக்கிறது
இதய அப்பிள்.
விட்டில் சுற்றியபடி
அள்ளித்திண்ணும் சாத்தான்.
"இன்னும் இருக்கிறது"...!
சதை வளர்க்கக் காலம்?
துவைத்து உலர்த்திட வெயில்?
சதை உரிஞ்சப்பட்டு
சிகப்புக் கழுவப்பட்டிருந்த என்
சுருண்டு போன இதயவுறுப்பு!
அள்ளித்திண்ணும் சாத்தான்.
"இன்னும் இருக்கிறது"...!
சதை வளர்க்கக் காலம்?
துவைத்து உலர்த்திட வெயில்?
சதை உரிஞ்சப்பட்டு
சிகப்புக் கழுவப்பட்டிருந்த என்
சுருண்டு போன இதயவுறுப்பு!
வேதம் ஓதுவதோ ,
சாத்தான்!!??
சாத்தான்!!??
கரிய நாகத்துக்கு
பச்சை இரத்தினம்?
காதுக்குள் மெல்ல முணங்கும்
பருவம் கொல்லும் ஆசைக்
குரல்!!!
ஓதுகிறான் சாத்தான்...
பச்சை இரத்தினம்?
காதுக்குள் மெல்ல முணங்கும்
பருவம் கொல்லும் ஆசைக்
குரல்!!!
ஓதுகிறான் சாத்தான்...
நதி இன்னும்
ஓடியே முடியவில்லை;
நாழி இன்னும்
ஓய்வு எடுக்கவுமில்லை;
நரைக்காது உன்
ஓடா வயது,
நடை போடலாம் கொஞ்சம்
ஓய்வெடுத்து."
ஓதுகிறான் சாத்தான்...
இதயம் முழுக்க
இருட்டைப் பூசி,
உதயம் மறையா உலகமிதென்று
ஈன்று கொல்கிறான் கனவை!!!
ஓடியே முடியவில்லை;
நாழி இன்னும்
ஓய்வு எடுக்கவுமில்லை;
நரைக்காது உன்
ஓடா வயது,
நடை போடலாம் கொஞ்சம்
ஓய்வெடுத்து."
ஓதுகிறான் சாத்தான்...
இதயம் முழுக்க
இருட்டைப் பூசி,
உதயம் மறையா உலகமிதென்று
ஈன்று கொல்கிறான் கனவை!!!
"இன்னும் இருக்கின்றது " என்ற
ஜப மோட்சத்தால்...
ஜப மோட்சத்தால்...
முதிர்ந்து போன
கனாவுக்குள் கைகட்டி நிற்கையில்
உதிர்ந்து போயின -என்
காலங்கள்.
முரட்டுப் பிடியில்
இருக்கி மூடிய காதுகள்-இப்பொழுது
முணங்களுடன்
இழிந்து போயின!
கனாவுக்குள் கைகட்டி நிற்கையில்
உதிர்ந்து போயின -என்
காலங்கள்.
முரட்டுப் பிடியில்
இருக்கி மூடிய காதுகள்-இப்பொழுது
முணங்களுடன்
இழிந்து போயின!
உறத்துச் சொன்ன சாத்தான்
உயரப் பறந்தான்.
உயரப் பறந்தான்.
சாத்தான் மேலெழுந்தான்,
தூண்டில் கையில் கொண்டு.
சதை நாக்கில் கொக்கி குத்திட
தூண்டல் வரலாயிற்று மேலிருந்து...
தூண்டில் கையில் கொண்டு.
சதை நாக்கில் கொக்கி குத்திட
தூண்டல் வரலாயிற்று மேலிருந்து...
இன்னும் இருக்கின்ற
இல்லாதிருப்பவைகளே மிச்சமாயின!
இன்னும் இருகிப் போனது இதயம்!
இனிமேல் , கதியே
"இல்லை"யென்றாகிப்போனது!
தொலைந்தே போனேன்...
இல்லாதிருப்பவைகளே மிச்சமாயின!
இன்னும் இருகிப் போனது இதயம்!
இனிமேல் , கதியே
"இல்லை"யென்றாகிப்போனது!
தொலைந்தே போனேன்...
என்
எண்ணம் மட்டும்
இன்னும் உள்ளே மீட்டிக்கொண்டது.
"நிலைக்கும்"என்கிற
நீண்ட பெருமூச்சு.
எண்ணம் மட்டும்
இன்னும் உள்ளே மீட்டிக்கொண்டது.
"நிலைக்கும்"என்கிற
நீண்ட பெருமூச்சு.
No comments:
Post a Comment