சேர்த்து வைத்த கனவு
விழிக்கும் போதெல்லாம்
மொட்டு விரியலாயிற்று!
நினைக்கும் போதெல்லாம்
சொட்டுக்கள் சுரந்து இனிக்கலாயிற்று.
பிறக்கும் நொடியெல்லாம்
சுட்டு உருத்தலாயிற்று!
இறக்கும் துளியெல்லாம்
பட்டு ,கண்ணில் கசியலாயிற்று!
மொட்டு விரியலாயிற்று!
நினைக்கும் போதெல்லாம்
சொட்டுக்கள் சுரந்து இனிக்கலாயிற்று.
பிறக்கும் நொடியெல்லாம்
சுட்டு உருத்தலாயிற்று!
இறக்கும் துளியெல்லாம்
பட்டு ,கண்ணில் கசியலாயிற்று!
துடிக்கின்ற அரும்பு மீசைக்காக,
உலகையே
துறக்கும் ஆசை கொண்டு
துச்சம்,
தூக்கிப் போட்ட அதட்டல்கள்
மிச்ச எச்சம்...!
உலகையே
துறக்கும் ஆசை கொண்டு
துச்சம்,
தூக்கிப் போட்ட அதட்டல்கள்
மிச்ச எச்சம்...!
தலையணைக்கடியில்
பருத்த மூட்டை,
விழிக்கும் போதெல்லாம்
பதுக்கி வைத்தெழுந்த...
யன்னல் திறப்பதெல்லாம்
விரித்திடத் தான் கனவை
மீண்டும் நான்!
பருத்த மூட்டை,
விழிக்கும் போதெல்லாம்
பதுக்கி வைத்தெழுந்த...
யன்னல் திறப்பதெல்லாம்
விரித்திடத் தான் கனவை
மீண்டும் நான்!
துளைத்து வைத்திருந்தேன்
நிலவினைக் கனவினில்,
நுளைந்து நான் சென்று
உலவியே மீண்டு வந்தேன்!
நிலவினைக் கனவினில்,
நுளைந்து நான் சென்று
உலவியே மீண்டு வந்தேன்!
இறங்கி வந்து,
துயில் எழ நான்
இதமான மலருக்குள் கிடந்தேன்...
தூவானம் குளிப்பாட்ட
இலை கொண்டு துவட்டிக்கொள்வேன்.
துயில் எழ நான்
இதமான மலருக்குள் கிடந்தேன்...
தூவானம் குளிப்பாட்ட
இலை கொண்டு துவட்டிக்கொள்வேன்.
வானவில்லில் ஒப்பனைகள்.
மேகப்பஞ்சில் ஆடை கொண்டேன்.
வாழ்ந்து வந்தேன் ராஜ போகம்!
தேகமெல்லாம் மிதந்த காலம்!- அது
கனாக்காலம்!
மேகப்பஞ்சில் ஆடை கொண்டேன்.
வாழ்ந்து வந்தேன் ராஜ போகம்!
தேகமெல்லாம் மிதந்த காலம்!- அது
கனாக்காலம்!
மிதந்துகொண்டே வாழ்ந்துவிட்டேன்...
கனவினிலே ஆழ்ந்துவிட்டேன்!
கவிதை எல்லாம் கோர்த்து வைத்து
கனவுக்குள்ளே பொய்கை செய்தேன்!
மூழ்கி அதில் நான் மிதக்க
வாழ்க்கை எல்லாம் மறந்து போனேன்!
நாட்கள் நடக்க
நானும் கடந்தேன்...
கனவினிலே ஆழ்ந்துவிட்டேன்!
கவிதை எல்லாம் கோர்த்து வைத்து
கனவுக்குள்ளே பொய்கை செய்தேன்!
மூழ்கி அதில் நான் மிதக்க
வாழ்க்கை எல்லாம் மறந்து போனேன்!
நாட்கள் நடக்க
நானும் கடந்தேன்...
கனவிலும் ஒரு பிரளயம்!
பருவம் மாறியது!
உலர்ந்தது கோடை வந்து!
வற்றிப் போன என்
வார்த்தைப் பொய்கை!
ஐயகோ...!!!
பருவம் மாறியது!
உலர்ந்தது கோடை வந்து!
வற்றிப் போன என்
வார்த்தைப் பொய்கை!
ஐயகோ...!!!
கனவுக்குள்ளும் விதிகள்
ஆளுமோ?
கவிதை குளமே வற்றும்
சாபமோ?
முடிச்சுப் போட்ட கவிதை
மூட்டைக்குள்
முக்கி முனகிய
கனவுக்கும்பல் எந்தன்!
ஆளுமோ?
கவிதை குளமே வற்றும்
சாபமோ?
முடிச்சுப் போட்ட கவிதை
மூட்டைக்குள்
முக்கி முனகிய
கனவுக்கும்பல் எந்தன்!
யாருமே காணாமல்,
யான் செய்த
யாகமிங்கு.
யாரெனை நம்புவார்
பாரென நானழுதால்?
யான் செய்த
யாகமிங்கு.
யாரெனை நம்புவார்
பாரென நானழுதால்?
பகல்க் கால உஷ்ணம்
முறுக்காமல்
திறந்து பாராமல்
மூடியே தான் வைத்தேன்.
தினம் யாமம்
முழுவதும் மூழ்கிக்கொண்டு இரா
விடிய இதமாகத் தான் கண்டேன்.
முறுக்காமல்
திறந்து பாராமல்
மூடியே தான் வைத்தேன்.
தினம் யாமம்
முழுவதும் மூழ்கிக்கொண்டு இரா
விடிய இதமாகத் தான் கண்டேன்.
உறைந்து கிடந்தது என் கனவு
மூட்டை.
நிறைந்து எழுந்த என் கற்பனைத் தீ
முட்டை!
மூட்டை.
நிறைந்து எழுந்த என் கற்பனைத் தீ
முட்டை!
என்
எண்ணப் பிரமாண்டம்!
எண்ணாப் பிரமாணம்!
என் ஒற்றை ஓட்டு மூளைக்குள்ளே
எங்கெல்லாமோ ஓடப்பாய்ந்தது!
எப்படியும் எல்லையில்லை
என்றாகிப்போன
என் மூளை!
எஃகுறிக்கொண்டு
எழுந்து வெடித்த கனவு...!!
எண்ணப் பிரமாண்டம்!
எண்ணாப் பிரமாணம்!
என் ஒற்றை ஓட்டு மூளைக்குள்ளே
எங்கெல்லாமோ ஓடப்பாய்ந்தது!
எப்படியும் எல்லையில்லை
என்றாகிப்போன
என் மூளை!
எஃகுறிக்கொண்டு
எழுந்து வெடித்த கனவு...!!
தலைக்குள்ளே விரிந்துகொண்ட
கனவு,
ஓர்நாள்...
காலாவதியே ஆகிப்போயிற்று!
ஓட்டை விழுந்து வெடித்துக்கொண்டே
கசிவுணர்ந்தேன் சிவந்த இரத்த!
கனவு,
ஓர்நாள்...
காலாவதியே ஆகிப்போயிற்று!
ஓட்டை விழுந்து வெடித்துக்கொண்டே
கசிவுணர்ந்தேன் சிவந்த இரத்த!
ஒவ்வொன்றாய்
கனவுடைந்து...
ஓய்ந்து போன என்
கற்பனை மழை!
கனவுடைந்து...
ஓய்ந்து போன என்
கற்பனை மழை!
By ஷஹி ஸாதிக்
http://www.dinamani.com/specials/kavithaimani/2017/sep/10/சேர்த்து-வைத்த-கனவு--ஷஹி-ஸாதிக்-2770773.html
http://www.dinamani.com/specials/kavithaimani/2017/sep/10/சேர்த்து-வைத்த-கனவு--ஷஹி-ஸாதிக்-2770773.html
No comments:
Post a Comment