Tuesday, 26 September 2017

பறவையின் மனசு: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th September 2017 03:27 PM  |   அ+அ அ-   |  
பறந்துகொண்டே தான்
இருக்குமா?
இறக்கை விரித்தபடியே தான்
நடக்குமா?
ஏதோ ஓர் 
திசை நோக்கி...
ஏரெடுக்கும் பார்வை 
அது.
ஒவ்வொரு இரகும்
ஓராயிரம் கணம் படும்.
எவ்விடம் போகவும் 
ஏராமல் எப்படி பறந்திடும்?
துரத்திக்கொண்டே 
ஓர் திசையை...
ஓர் இலக்கை.
ஓர் விசை ,இழுத்தெடுக்க
ஏரிப் பறந்திடும் வானம்.
அது ,
காற்றைக் கிழிக்கும்
கருவி!
மழையில் நனையாக்
குருவி.
வெய்யில் வெட்டும் போதும்
வெந்தும் மேலெழும் 
அருவி!
பறவையாகிறது!
வானில் 
பறப்பதால்.
பறக்கிறது,
மனதை எடுத்துக்கொண்டு...
அலைகளோடு கைகுளுக்கும்
அபார இரஜதந்திரம்.
அடிக்கின்ற போது
இறகு கூட 
அடாது மடிந்தாலும்!
புரப்படலின் 
மீலல் நோக்கி,
பறந்தே தான் 
மீண்டும் 
தாழும்.
உயர்ந்துகொண்டே செல்லும்
போதும்,
ஊடே பரக்கும் கீழே 
மீண்டும்;
உண்ணிப்பான பார்வை
கொண்டு
உணர்ந்து பறக்கும்
மனது உண்டு.
அது,
பறவை மனது.
புதுத் தூரக் 
கனவொன்றும்,
பிழைக்காத மனமொன்றும்!
இறக்கை நம்பி
இலக்கை நம்பும்
உதிக்கை ஒன்று
இதயம் கொண்டு...
மிதக்கின்ற கற்பனை
பிடிக்க,
ஆயத்தம்.
மிரட்டல்கள்,
காற்றாக,புயலாக
நிமித்தங்கள்!
இருதயம் ஏதோ
சிறியது தான்,-ஆனாலும்
இறக்கை விரித்திடும்
சில நிமிடம்...
நொடியும் தளராமல்
பறக்கிறது...
புது முடிவை நோக்கி
தொடரும் பயணம்!

No comments:

Post a Comment