புதிய ஓட்டம்: ஷஹி ஸாதிக்
By கவிதைமணி | Published on : 01st October 2017 03:16 PM | அ+அ அ- |
ஒரு இதயம் முளைக்கிறது, அதனுள் கனவு பிறக்கிறது புது ஓட்டம் எடுக்கிறது! மனம் பறக்கத் துடிக்கிறது... கனவு, சிறு துகளாய் மிதக்கிறது, அணு பரவி அதிர்க்கிறது! மனம் முழுக்க பார்வைகளே! இனம் அறியாத் தேடல் கொண்டு.. தினம் , உஷ்ணம் அடைக்கின்றது. நிறம் வெளிர்கின்றது... நாளம் நாடிக்குள்! புது ஓட்ட ஆரம்பம்! ஓயாத புல்லரிப்பு உள்ளங்கை உறுத்தல்! சாயும் சந்திரன்? தேயும் சூரியன், ஏதும் ஆகலாம் தேடும் பாதையில்... தீண்டும் வானவில் ஓட்டை வீழலாம் தாண்டி பாயும் தீரா தாகம்! கொதித்துக்கொண்டே கொப்புளிக்கும் கனவுகள் பற்றிக்கொள்ள! ஓடுகிற , மேகம் ஓயாமல் தேடுகிறது புது வானம்... மேகமென்ன கரைந்தாலும், கரைந்திடா ஆகாச வஸ்து! ஆகிப்போன திட வளர்ச்சி... என் ஓட்ட நரம்பு விரிந்தே சென்றிட... வானமெல்லாம் வேர்விட்டு பரவிட ஓடிக்கொண்ட பயணம் இன்னும் பாதி வழியில் தரித்துக்கொண்டு... வின் நோக்கி எழும் கல்லடி எண்ணிக்கொண்டு... என்னைத் தொடவே இல்லை, என்னில் சிதைவும் இல்லை!
No comments:
Post a Comment