காந்திக்கு ஒரு கடிதம்: ஷஹீ ஸாதிக்
By கவிதைமணி | Published on : 09th October 2017 03:47 PM | அ+அ அ- |
நாங்கள், தொலைத்து விட்ட உன் நிழல் காலம் நோக்கி... நீ சிலையாகி விட்டாய்; நாங்களோ, சின்னாபின்னமாகிவிட்டோம்! வெண் புறாக்களை வெறுமனே போஸ்டர்களில் பதித்து வைத்து, சிறகையும் கட்டிப்போட்டு சுதந்திரம் பேசுகிறோம்! வெய்யிலில் வெந்து வாடி நொந்து கரிகிறது வெண்புறா! நீ பார்த்திருக்கிறாய்! நாங்கள் பதுங்கிக்கொண்டு தான் பார்க்கிறோம்! எங்குமே, வாடை அழுத்த அரசியல், கட்சிக்கூண்டுகளில் கைதி போல் குந்திக்கொண்டு! நீ, நட்டு வைத்த மரங்களின் நிழல்கள் கூட திருடப்படுவது நிதர்சனமாகிக்கொண்டு... ஊண்று கோலும் கூட ஊழல் பூச்சிட்ட பின் தான் ஊண்ர வேண்டி இருக்கிறது! நீ, நடந்த பாதையெல்லாம் கடத்தப்பட்டன... அடர்ந்த அவலத்தோடு புதைக்கப்பட்டன! தாரும் மண்ணும் நசுக்கிக்கொண்டு... தீண்டாத மனிதரெல்லாம் கூண்டோடு குவிக்கப்பட்டனர்! தீயாலும் துரத்தப்பட்டனர்! மாண்டோரிலும் நுழைக்கப்பட்டனர்! கை நீட்டி ஆணையிடும் கயவரெல்லாம், ஆசனம் பெற்றனர்! வேட்டுக்கள் இன்னும் செயல் இழக்கவே இல்லை! உன் நெஞ்சு துழைத்த தோட்டா முதல்... நீத்துப் போன அகிம்சை மூச்சு! இருட்டடிப்பு இத்யாதி... பாதாளம் வேதாளம் ரகம். நீ, கொடுத்த வெள்ளை சால்வை, உடுக்கும் போதே உருவப்படுவதேன்? உயிரை உரித்தெரிக்கின்றவர் பெயர்தான் இன்று தலைக் கவசத்தோடு தலைமையில் நிற்கிறது! பண்பாடுகள், உடன்பாடில்லாத புண்படுத்தலால் உடல் மடிகின்றன! இருட்டடிப்பும், பாதாள இருட்டறைகளும்! சாணமடிக்கிறது பார்வைகளுக்குள் சாகவும் வாழ்வும் ஒரே கலாச்சாரம் இங்கு! மீண்டும் வந்து மிலேனியம் விதைத்துச் செல்லும் காந்தி தேடும் காலம் கொண்டோம்... சிலைக்கு மட்டும் மழை பெய்கிறது இன்று!
No comments:
Post a Comment