Sunday, 12 November 2017

உன் குரல் கேட்டால்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 12th November 2017 03:45 PM  |   அ+அ அ-   |  
என்
காத்திருப்பு...
ஒரு
பொப்பிப் புதர்
இரத்தம் குடித்து
எழ முன்னே,
புது
மலர் வனம்,
மனதெல்லாம்
முளைத்திடும்
மழைக்காலத் தேடல் ஒன்று...
ஆலயமெல்லாம்
அரக்கர்களைப் பலியிட்டு
ஆலாபனைகள்
அன்பினை ஊட்டல் கொண்டு!
இன்னும் பல
அபிலாஷை ஆவளிகள்
கொண்டு...
எங்கள்
சிறைக் கூண்டுகள்.
சிதைக்கப்படும் சுதந்திர
சிந்தனைகளுள்!
தாகச்
சிறைக்குள்
கைப்பற்றிய
சிந்தைக்
கோடைகள்!
ஒரு
புது வனம் அமைத்துக்
குயில்க் குரல்
படைக்க
வசந்தங்கள்
விடை கொடுக்கும்...
மீண்டும் பூக்குமா?
இந்த,
கம்பி எலும்புகளும்
சீமெந்து சதைகளும்
கடித்துத் திண்ற
சில்லென்ற பசுமைகள்...
முள்ளுக்குப் பதில்
வேலி பூத்த
உளிக் கம்பி!
நீ
பாடும்போதேனும்
புற்றரை
படராதோ?
குகனே...!
வசந்தங்கள்
வாசல் மிதிக்காத
நகர
நாகரிகம்,-உன்
கூவலில்
தளிர்க்காதோ?
கடுதாசிப்
கடிதம் படிக்கும்
அன்றைய
சித்திரைகள்,
இலத்திரன் வந்து
சிதைத்த மிதக்கின்ற
பழைய நினைவுகள்...
இன்னுமொரு
வசந்தம்,
இந்தப் போலியெல்லாம்
கலைக்கக் கேட்டேன்!
நீ
பாடும் திசை ஆய்ந்து
பழைமை ஒன்றைப்
புதிதாய்ச் செய்து,
பருவம் மீண்டும்
உருவமைக்கும்
பசுமை வசந்தம்
நான் அமைப்பேன்...
ஆனால்,
குயிலுக்கும் விடுமுறை
ஆயிற்றோ
கூகுளின் செயற்கையால்?

No comments:

Post a Comment