Sunday, 14 January 2018

யுத்தம் செய்யும் கண்கள்: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 13th January 2018 05:43 PM  |   அ+அ அ-   |  
சத்தம் இல்லா நாழிகைகள்
ரத்தம் சிந்தா வடுக்களில் ஒழிந்து கொண்டு!
நித்தம் நித்தம் 
ச்வப்தம் இல்லா அசைவுகள் அவை!

நுண்ணிய பார்வைகளுள்
நொருங்கி ஒழிந்துகொண்ட,
இரகசிய இரசனைகள்...!
நொந்தும் வலி சிந்தா
இருகிப்போன பனிக்கட்டிக்குள் போல்
இருதயம்!

கடல்த் தொடா வானம் போல்...
உடல் இல்லா வருடலோ கண்ணில்?
உறைந்த பனிக்கல்லில்
மறைந்து போனது தொடலின் உரிமை!

தூரப் பாலையும் 
பனிப் பாறை சிக்குண்ட மனமும்!
துரத்திச் செல்லும் பார்வை மட்டும்,
பதிந்த உருவம் படிந்தே கிடக்க!
துளைத்துச் செல்லும் 
புழுவெனத்தவிப்பு!
புழுதி கூட ஈரமாக...

வரண்டு போன எந்தன் கண்கள்!
கரடு முருடு தளங்களின் மீது
ஒளித் தெரிப்பு உடைந்து
நெலிய!
உருகி உடைந்து உயிர் பெற்றாலும்
கருகிப் போன கண்ணதன் தேடல்!

நெருங்கியே செல்லும் கண்ணில்
நட்டுப்போட்ட அம்புளிகளுக்குள்,
நுழைந்து செல்லும் சிவந்த குழாய்கள்
நூராயிரம் தாண்டிக்கொண்டு!
நுழைவே இல்லா இலட்சியத்தில்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பு!

மனதோடு மல்யுத்தம்!
பார்வைக்குள் நுழைந்து
பந்தாடிப் பார்க்கின்ற 
விதியின் வாள் வீச்சு!
நிறமில்லாமல் இரத்தம் வடிகின்ற
விசித்திரப் போராளி கண்!

No comments:

Post a Comment