Wednesday, 24 January 2018

தூரத்து வெளிச்சம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 20th January 2018 05:30 PM  |   அ+அ அ-   |  
என் தரணம்...
இருக்கிப்பிடித்த
எசம்,
இமைக்காமல் அப்படியே
இசுவாச நாளம்.
இன்னொரு உலகில் 
தரணிக்கிறேன்.
இங்கு எல்லாமே
திரவத் தீண்டல்.
குழந்தையென
ஜனனித்தேனோ?
குருகிப்போன அசைவின்
விசை இங்கு!
அந்தத்தில் வீழ்ந்துவிட்டேன்!
தேடத்தேட இன்னும்
தேடும் தொலைவில்
பசைந்த என் உடல்.
ஈரம் ஊரும்
இரண்டாம் உலகம்!
தூரம் சென்றுகொண்டு,
இன்னும் முன்சென்றாலும்...
இது ஒரு
புது இயற்கை எனக்கு!
இன்னும் செல்கிறேன்,
புதைந்தவன் நீந்திட
இடைவிடாத அமுக்கம்...
ஏதை நீங்குவேன்?
இருப்பதெல்லாம் அதுவாகி
கா!
ஈரக்கா!
புகுந்து புகுந்து
புதுவிடம் தேடிக்கொண்டு
புதைந்து ,தொலைந்து
அலைந்தும் 
நிலைத்து...
நெருங்க நெருங்க
நீங்கிச் செல்லும்
நிலவென ஓடும்
நிழலா நீ?
நுழைந்து கொண்டு
மீழும் போர்!
நணிச் சொட்டுக்கள்
நகர்தலில் என்
நடமாட்டம்!
எட்டிப்பிடிக்க இயலவில்லை,
துரத்திச் செல்கிறேன்...
என்னைத் துரத்தும்
ஈரச் சுவாலைகள்,
எரிந்து தீர்க்கின்றன இடைவெளிகளை!
இங்கு,
இடைவெளிகள் 
கிடையாது.
நான் பின்னலில் 
ஓர் நூலாகிறேன்.-இது
இறுக்கப்பின்னல்!
கடவுட் துகள்களில் 
நானும் "திரவன்" ஆகிட!
கடவுள்த் துகளானவன்.
நானும் நெருக்கமாகிறேன்.
ஒளியானவனின் ஓர்
துளியான பிரதிமையாகிறேன்!
நுண்மையில் நான்
துகள் அண்ணவன்.
பிரபஞ்சங்களின் கருமை,
இரவு பகலிலில் ஒருமை-அச்
சொட்டுக்களில் வாழ்கின்றன 
இறைவனின் ஒளித்துளிகள்.
கண்ணாடித் துகள்,
என் உருவாகிறது!
நான் காட்டும்போது 
அவன் இறைமையாட்சி.
கரையாமல் நான்
தனித்துவத் திரவன்.
கடவுளின் பிம்பம்
என்னில் ஏற்றவன்.
திணிவில் நீங்கி
திவ்வியம் நெருங்கி,
கருமை மெதுவாய் விட்டு
நீந்தி,ஒளியை
ஏந்தி...
ஒளிச்சொட்டுக்கள்
தெளிவான எட்டுக்களாயின.
ஒழிவு மறந்தேன்.
தெளிவில் மீண்டும் பிறந்தேன்.
கறுமையுள் அழுந்த
வெறுமையாய் கனத்திருந்தேன்...
கறுமையின் நீங்க
வெளிர்ந்து நான் 
கனம் இழந்தேன்.
சேய்ந்திருந்த துளிகள்
கற்றையென மோட்சம் பெற,
காய்ந்த ஈரம்
தேய்ந்து போக...
சங்கமித்தேன்.

No comments:

Post a Comment