Sunday, 28 January 2018

நல்லதோர் வீணை: ஷஹி ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 27th January 2018 06:05 PM  |   அ+அ அ-   |  
இயற்கையே
இசை எனக்கு,
இன்னொரு வீணை எதற்கு?
இலைகளின் அசைவதற்கு
ஈடெது இசைக்கணக்கில்?
விலையிலா இயற்கை
வீடெங்கள் 
நிலவுகைக்கு.
செவிகளில் இலத்திரன்
விரல்களின் டிஜிடல் யுகம்,
கவிதையெல்லாம் யுனிகோடென
மிரட்டுகின்ற செயற்கைப் படை!
இசைக்கவொரு புது வீணை
இயற்ற ஒரு மரமில்லை!
இருந்ததெல்லாம் இறந்து போன
இறுதிக்கனங்கள் நினைத்துப் பார்த்தேன்!
இன்னும் அழுதுகொண்டே 
வாடி நின்ற ஆணி வேர்...
இல்லா நிழல்த் தேடி
வானத்தில் இழைப்பாரி!
ஈரமில்லா பாடலிங்கு
உலர்ந்து போன சதை
நரம்பு!
உயிரில்லாமல் இயற்கை சாக
உரமில்லாத துறவு பூண்டு...
இயற்கை சாகிறது...
பாலையில் கள்ளி முள் மீதா
இசை மீட்ட ?

No comments:

Post a Comment