Monday, 12 February 2018

வஞ்சம் செய்வாரோடு: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 11th February 2018 03:16 PM  |   அ+அ அ-   |  
மனம்
இனம் கானாத
மௌனப் பார்வைகள்;
குணம் யாரறிவார்?
உளம் 
உயிர்ப்பெற்றிட
உணர்வாரோ?
உமிழ்தலும் அழகோ?
ஒரு பனித்துளி
சுட உருகிடாதோ,
சிறு பரிதாபம்
ஏது...
நச்சு முள் மரம்
நட்டு வைத்தோர்
நன்மை ஏது 
கண்டார்?
மொட்டு சூழ்ந்து
ஒட்டி நின்ற
முட்கள் கண்டுகொண்டும்,
தொட்டு முட்டும் காற்று...
முட்கள் 
மட்டும் செய்யும் அராஜகத்தில் மூச்சு 
முட்டும் 
வாட்டம்!
மொட்டெனப் பிழந்து
மலரெனப் பிரிந்து
காய்ந்து கனிந்தது உதிர்ந்திட
உண்ணார்,
கொய்தலே முறையென 
யாருறைத்தார்?
கொலைஞர்கள் சரியென
யார் விதித்தார்?
மகரந்தத் துகளாகி
மலர்களில் நான் உறைந்தாலும்
மகரங்கள் மொய்க்கையில்
மலர்விட்டுப் போனவள் நான்!
மருதானி ஆகிப்போனேன்
வண்டுக்கும் தேனிக்கும்.
மறு நாளில் நீங்கிப் போனேன்
வழியில்லா இழிவாகி!
நான் உதிரும் வரை
தான் உயர்த்தப்ப்ட்டேன்.
யான் உருச் சிதைய
ஏன் உரிமை இழந்தேன்!
உதிர்த்துப் போட்டவர்
உயிர்க் கொய்தவர்
உடல் சிதைத்தவர்
உரிமை பெற்றனர்!
உலகமே சிதைந்தவள்
உயிரைத் தேடி...
துரத்திச் செல்லவா
தூரம் தேடி? -விஷக்
கரங்கள் கொய்யவா
மரங்களில்த் தேடி...
என்
உருவம் திரும்பிடுமா
முன் உயிரை நோக்கி?
கரும் இருளும் விடிந்துவிட்டால்
என் பகலை நோக்கி...!
துஷ்டனே!-நீ
புஷ்பங்களில் தேடும்
ஆயுதம் நானோ?-என்
நிஷ்களத்துள் நீ
ஆழ்தலில் என் ஜெயம்!
நான் 
நச்சுத் துகள்
உன்னோடு!
துச்சனுக்கோர் 
உடங்கமிழ்தம்!
நீ
நீடு 
நீத்ததுன் உயிராக,
நான் தீதை போக்கிடும்
தீர்த்தமாக.
வஞ்சதிற்கு
நஞ்சென ஆகி,
வஞ்சனோடு நான்
நஞ்சன்!

No comments:

Post a Comment