தற்கொலை செய்யும் கனவுகள்: ஷஹி சாதிக்
By கவிதைமணி | Published on : 11th March 2018 04:34 PM | அ+அ அ- |
மண்ணில் பசுமை
விதைத்துக் காத்திருந்தோம்...
தண்ணீரென சமாதாணம்
இறைத்து.
எங்கள் மரங்களில்
கருணை பூத்தன.
இரவுகளில் இருளும்
தொலைந்திருந்தது.
இதயங்கள்
இணைந்திருந்தோம்.
விதைத்துக் காத்திருந்தோம்...
தண்ணீரென சமாதாணம்
இறைத்து.
எங்கள் மரங்களில்
கருணை பூத்தன.
இரவுகளில் இருளும்
தொலைந்திருந்தது.
இதயங்கள்
இணைந்திருந்தோம்.
ஓர் நாள்,
நாங்கள் திருடப்பட்டோம்.
ஒரு காட்டுத்தீ
கரித்துப் போன சமாதாணம்!
நாங்கள் திருடப்பட்டோம்.
ஒரு காட்டுத்தீ
கரித்துப் போன சமாதாணம்!
நிலவைக் கட்டிவைத்திருந்தேன்,
கயிறும் எரிந்து போனது!
பிளவில் சுருண்டு படுத்து
ஊதிக்கொண்டே பெருநெருப்பெடுத்தனர்!
கயிறும் எரிந்து போனது!
பிளவில் சுருண்டு படுத்து
ஊதிக்கொண்டே பெருநெருப்பெடுத்தனர்!
மீண்டும் வரா இருள்
எம் கனவு,
சீண்டிட புகைந்தெழ
என் செய்வோம்?
எம் கனவு,
சீண்டிட புகைந்தெழ
என் செய்வோம்?
புல்லெல்லாம் சாம்பல் நிறம்!
அவர்கள் எரிக்க, நாங்கள்
கரிகிறோம்...!
அவர்கள் எரிக்க, நாங்கள்
கரிகிறோம்...!
யானைகள் தூங்கும் காடிது.
பச்சை உண்ண மட்டும்?
யாரெல்லாம் இருந்தார்களோ
தப்பியோடி கை விரித்தனர்.
பச்சை உண்ண மட்டும்?
யாரெல்லாம் இருந்தார்களோ
தப்பியோடி கை விரித்தனர்.
புஷ்பம் பூக்க
உஷ்ணச் சாம்பல்
உரமோ?-நாங்கள்
கொழுத்தப்பட்டு?!
உஷ்ணச் சாம்பல்
உரமோ?-நாங்கள்
கொழுத்தப்பட்டு?!
அவர்கள் பூக்கும்
கனவுகளில் ஏதும்
அஹிம்சை ஆழமில்லை.
கனவுகளில் ஏதும்
அஹிம்சை ஆழமில்லை.
ஆனாலும் பூக்கின்றன!
நாங்கள் உரமாக்கப்படும் சதி!
ஆறுகள் திசைதிருப்பப்பட
காட்டுத் தீ...!
நாங்கள் உரமாக்கப்படும் சதி!
ஆறுகள் திசைதிருப்பப்பட
காட்டுத் தீ...!
தாபத்திற்காய்,
பூவின் தேன் பருக மாட்டோம்!
காபனில் வாழும் பூ என்னோடு
ஆவியாகட்டுமென,தற்கொலை
செய்யட்டும் என் கனவும்...!
பூவின் தேன் பருக மாட்டோம்!
காபனில் வாழும் பூ என்னோடு
ஆவியாகட்டுமென,தற்கொலை
செய்யட்டும் என் கனவும்...!
இது தான்
இறுதி என...
புது கனவுளங்களே
குருதி வளர்த்துக்கொள்ளுங்கள்,
புயல்த் தீண்ட மீண்டுமெழுவோம்,
கனவு வளர்த்துக்கொள்ளுங்கள்!
இறுதி என...
புது கனவுளங்களே
குருதி வளர்த்துக்கொள்ளுங்கள்,
புயல்த் தீண்ட மீண்டுமெழுவோம்,
கனவு வளர்த்துக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment