Sunday, 18 March 2018

நெருப்பின் தாகம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th March 2018 05:53 PM  |   அ+அ அ-   |  
சுவாலைக்குள்த் தான்
சுருண்டுகொள்கிறது...
கருப்பாக.
நான் 
திரும்பிப் பார்க்கும் இருள்,
சூழப்பட்டு சதிவலை.
இருளுக்குள் ஒழிந்துகொண்ட
இதம்.
கை நீட்டிப் பிடிக்கிறது
என்னை...
கைதியாகிப் போகிற என் எல்லைகள்.
தூண்டலில் ஓடும் என்னில்
தேடலை தூண்டும்
தூண்டில் அது
ஓடல்...
நான் 
நட்ட மரங்களில்
மலரட்டுமென்ற 
மந்திரம்.
தொடர் பயணம்
ஏரிப் பிடித்து உயர்கிற வினோதம்.
தொலைவைத் தொடுகிறேன்.
எரிகிற இலட்சியத் தீ!
படர்ந்தது நிலத்தில்,
பற்றி எழுகிறேன்...
கொஞ்சம் கொஞ்சம்...!
மிதிக்கப்பட்ட சருகு
நான்,
மிகைத்து எழுந்த 
தணலாக!
இழிந்து விழுந்த 
இலை அன்று,
உயர்ந்து எழுந்த
உஷ்ணக்கொடி!
நான் தீண்ட
நடுநடுங்கும் தீண்டல்!
தாகிக்கக் குடித்தாலும்
தாகிக்கிற மனது!
தாக்கிப் பிடிக்கிறேன்-இலட்சியங்கள்
தாங்கிக்கொண்டு!
பயணம் இன்னும் 
நீழ்கிறது...

No comments:

Post a Comment