Sunday, 25 March 2018

இரை தேடும் பறவை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 25th March 2018 03:06 PM  |   அ+அ அ-   |  
தேடலில் 
விடிகிற நாளைகள்...
தேடிடும் 
முடிவுறாப் பாதைகள்.
ஆயிரம்
ஆதவன் உதித்திடும்
நாளைகள்,
நாடிடும் உடுக்களின் 
மாறிடும் ஜாடைகள்;
ஆறுதல் இல்லா 
மீறுதல் கனவில்...
இன்று கான்கிற 
நாளை,
இல்லை விடிகிற 
வேலை!
ஒரு 
தூரப் பார்வை 
ஆழ்கிற பயணம்...
தூக்கிச் செல்லுது
ஆன்மா உடலை...!
ஊர்ந்து செல்லுது 
வயது...
ஊரும் கன்னிலே 
கனவு...
கொய்திடச் செல்கிறேன்,
கைகளில் காற்று விலங்கு
பூட்டிவிட்டதோ காலம்!?
தான்டிச் செல்ல 
மீழ்கிற தடை!
தேடலில் முடிந்து
தேடலில் விடிகிறது
நான் எனும் பறவை.
மீண்டும் பறக்க 
நான் ஆசை கொண்டு,
தேடும் இரை 
தான் தேடலில் உண்டு.
நான் 
பறக்கிறேன் இன்னோர் 
நாளைத் தேடி...
அது விடிகிறபோது
நான் தொடுகிற எண்ணம்,
தொலைவில் வைத்த 
இலக்கு என்
இரை.
தொடுவதற்காகவே
பிறக்கிறது தேடல்.
நாளை...
-ஷஹி சாதிக்.

No comments:

Post a Comment