Tuesday, 18 July 2017

இன்றைய தாலாட்டு


இன்றைய தாலாட்டு: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 17th July 2017 05:15 PM  |   அ+அ அ-   |  


ஆராரோ, ஆரிவரோ...
அன்றைய குழந்தைக்கு.
அறவைக் குழந்தைக்கு எம்.பி.திரீ
இன்றைய தாலாட்டு!
தாயாரோ வீட்டிலில்லை.
தடுமாறும் குழந்தைக்கு,
வாயாரத் தாலாட்ட அன்னைக்கு
கெடுவுமில்லை!?
தூக்கமின்றி ஓடுகின்ற
உலகமதன்
தாக்கமிதோ?
உரக்கம் கெட்டு அழுகின்ற போதும்
மறந்துவிட்டால், குழந்தை என்று?
தால் தொடாத சொல்லாலே
நாள் ஓடும் அவசரத்தில்,
தான் ஓடும் பரபரப்பில்,
தாலாட்டும் தடுக்கிப் போக!
தாயிருந்தும் அநாதைத் தூக்கம்,
தான்  பெற்ற தொழில்நுட்பம்
தாராளம் பாடினாலும்,
தாயாகும் தரமதற்கு
தாழ்வன்றோ?
தாய்மையே!!!  

No comments:

Post a Comment