Monday, 24 July 2017

தூரத்தில் கேட்குது: ஷஹீ ஸாதிக்

By கவிதைமணி  |   Published on : 24th July 2017 05:05 PM  |   அ+அ அ-   |  





கற்றை ஆள்  காதுகளில்
கத்திச்  செல்லும் பன்மொழி;
தொற்றிக்கொண்ட தலையணி,
தவறுதலாக,
கேட்ட இராகம் மாறிப் போக...
தரை முதல் கடல் வரை
விட்ட இரைச்சல் காதில் கேட்க!
தூரத்தே கேட்கிறது!
தூங்காத இரவில்
தாங்காத ஒரு ஓலம்!
இயற்கையின்
இசையமைப்பில்
இரவில் ஒரு கச்சேரி...
பசித்த குழந்தையின்
ருசிக்கும் எண்ண அழுகை.
துடிதுடிக்கும் காதலனின்
அடி அடிக்கும் -இருதயத்
துடிப்பு!
தூரத்தே கேட்கின்ற
ஆள்க்காட்டி பரிதவிப்பு!
ஓய்ந்திடாது கேட்பவைகள்
வாய்திறந்த இயற்கை
ஓசைகள்...
காதின்
நழுவிப் போன தலையணி,
காதை அடைத்த பின் தான்
நாதம் ஒலித்தது!
செயற்கை
நனைக்கும் கடதாசிச்
செவிக்குள்...!

No comments:

Post a Comment