பாரதி.
மீசைக்குள் தூரிகை வைத்தவன்.
பாஷைக்குள் பாரினை சேர்த்தவன்.
கார்முகிலை சிட்பமாய் வடித்தவன்,
நார் வீணை பாடிடச் செய்தவன்.
துர் சாதி இல்லை என்று பறைத்தவன்.
ஆகாயம் எட்டிப் பார்க்க-ஏழை
காயம் துடைத்தவன்.
ஆயிரத்தில் அவதரித்த
தாயகத்தின் தமிழவன்.
நூலெல்லாம் நெய்தன பாடல்,
தீயெல்லாம் கொதித்திடும் புரட்சி,
மாரெல்லாம் வீங்கிடும் வீரம்,
ஊரெல்லாம் அவன் வர வைத்தான்!
புதியதோர் கனவு கண்டான்,
நதியென பாடல் சொன்னான்.
பதித்திட தன் பெயரை -வரலாற்றில்
வதிந்து சென்றான்.
பாய்ந்து வரும் கவிதை ,
தாவி வரும் புரட்சி இவை
பாண்டித்தியம் காட்டித் தந்த
பாரதிக்கு சமர்ப்பணம்.
No comments:
Post a Comment