Sunday, 9 July 2017

பாரதி

  பாரதி.

  
 மீசைக்குள் தூரிகை வைத்தவன்.
 பாஷைக்குள் பாரினை சேர்த்தவன்.
கார்முகிலை சிட்பமாய் வடித்தவன், 
 நார் வீணை பாடிடச் செய்தவன்.
துர் சாதி இல்லை என்று பறைத்தவன்.




ஆகாயம் எட்டிப் பார்க்க-ஏழை 
காயம் துடைத்தவன்.
ஆயிரத்தில் அவதரித்த 
தாயகத்தின் தமிழவன்.

நூலெல்லாம் நெய்தன பாடல்,
தீயெல்லாம் கொதித்திடும் புரட்சி,
மாரெல்லாம் வீங்கிடும் வீரம்,
ஊரெல்லாம் அவன்  வர வைத்தான்!

புதியதோர் கனவு கண்டான்,
நதியென பாடல் சொன்னான்.
பதித்திட தன் பெயரை -வரலாற்றில்
வதிந்து சென்றான்.

பாய்ந்து வரும் கவிதை ,
தாவி வரும் புரட்சி இவை
பாண்டித்தியம் காட்டித் தந்த
பாரதிக்கு சமர்ப்பணம்.







No comments:

Post a Comment