என் இறகு விரித்த காதல்
ஒரு புயலென அவதரிப்பு.
பெரு மூச்சின் பிரதிபலிப்பு,
சிறு நேர அலைக்களிப்பு.
ஒரு காதல் பிரசவிப்பு!
உயிரோடு ஒரு தவிப்பு...
துயிலாமல் வரும் நினைப்பு!
உயிரில் ஒரு துகள் விழுந்து,
துளைத்துச் செல்லும் ரோகம் இது!
பயிராய் அது முளைத்து
பருவம் கொல்லும் பாரம் இது!
கையில் ஒரு சிறு சூரியன்
பொத்திக் கொண்ட பேதை நான்.
பையில் பல பகல்க் கனவுகள்
குட்டி போடமயக்கம் தான்.
கிளைகள் முளைத்த கைகள் -எந்தன்
காதல் தந்ததது சத்தியம்!
இலைகள் முழுக்க உந்தன் பெயரை
இரேகை கொண்டது அம்மரம்.
No comments:
Post a Comment