ஒரு தொலைவு தேசம்.
பல வைர ஆறுகள்,
சில தங்க ஊற்றுகள்,
வழி மரிக்கும் மலர் வாகை,
நீயிருக்கும் தொலைவு தேசம்.
அடர்ந்த கவிதைக் காடது.
கிளைகளெல்லாம் தூரிகை பிடித்திருக்க
இலைகளெல்லாம் காகிதமாகிவிடும்.
கிறுக்கப்படும் ஓவியம் நீதான்!
பனித்துளி காற்றினில் கலந்து வந்து
பகிர்ந்திடும் கத்தூரி சுவாசம்.
பறவைகள் விரித்திடும் சிறகினில்
பகலெலாம் உன் நிழல் பேசும்.
பெயரில்லாப் பெரும் காடு உந்தன்
பெயராலே உயிர் வாழும்.
உயிரில்லா நெடும் தூரம் நீ நடக்க
உஷ்ணம் பெறும்.
ஒரு சில மீட்டர் தூரம் எனக்கு
ஊர் பல தாண்டும் கஷ்டக் கணக்கு!
No comments:
Post a Comment