Monday, 10 July 2017

ஒற்றையடிப் பாதையில்,ஒற்றையாய் இராத்திரியில்..



ஒற்றையடிப் பாதையில்,ஒற்றையாய் இராத்திரியில்..



 இராக்கால ஊது குழலின்
  பாஷை என்னவாம்?
  இசையினில் கலந்து வரும்
   வேதல் சொல்வதாம்!

  நிலாக் காயும்
  நிசப்த இரவின்  ஓரம் ஒன்றிலே,
  நுழைந்து நாணல்
  மேய்ந்து வரும் காற்றின் வழியிலே...

 ஆற்றங்கரை ஆலமர விசிரும் இலையிலே,
 ஆயிரமாம் இரைச்சல் ஒலி நிசப்த இரவிலே!

 பழுதுபட்ட பொழுது தாண்டி பயணப்படுகையில் ,
 அழுது பாடும் ஓசை ஒன்று
 அடுத்த நொடியிலே!

படுத்துப் போன பிணங்கள் எல்லாம்
எழுந்து வருவதோ?
பனியில் ஊரிய  பாதை எங்கும்
ஊசலாடுது.

இன்னும் கேற்கும் பாடலொன்று
 என்னுள் தேடிடும் ராகம்.
 என்னுள் ஆடும் இதயம் போடுது
 போட்டி போட்டு புது ராகம்.

No comments:

Post a Comment