தனிமையில்
இருளின் கருப்புத் தேய்த்து வைத்த மேனி,பருவம் துளைத்து விளையாடும் இரவின் தனிமை.
இடைக்கிடை படரும் இருதயப் படபடப்பு!
கிட்ட வந்து தடவிச் செல்கிறது நீல மின்னல்.
தொடர்கின்ற ஜாமத்தில் தனிமைப் போட்டி.
வானத்தில் வானியும் வான் பார்த்த நானும் தனிமையில்.
வாசலோரக் காத்திருப்பில் யாரோ வருவார் போல்,
ஊசலாடும் உள்ளகப் புல்லரிப்பு!
ஏதோ ஒரு ஏமாந்த ஏக்கம்!
எங்கோ செல்கின்ற நெஞ்சத் தேடல்,
சடலம் ஒன்றிங்கு உஷ்ணம் காயாமல்!
வரண்டு போன தொண்டை நரம்புகளில்
என்றுமே ஈரம் சுரக்காதோ என!
தோற்றுப் போன கனவுகளின் யாமம்.
மறந்தே போய்விட்ட எழுந்து நிட்கும் உரோம அணிநடைக்குள்,
உராய்ந்து செல்கின்ற இளமையின் மின்சாரம்.
தனிமையில் பற்றிக்கொண்டது,
உயிருக்குள் சிக்கிக்கொண்ட ஒரு புது இரத்தத் துணிக்கை,
நாடிகளில் .....
No comments:
Post a Comment