உனக்காக
ஓராயிரம்
ஜன்னல்கள் இருக்கட்டுமே -தினம்
உன் முகம் பார்த்திட சுவரினிலே.
ஊரெல்லாம் பூக்கள் பூக்கட்டுமே,
உனக்காக மாலைகள் கோர்த்திடுவேன்.
நெடும் பாதையில் உனக்காய் காத்திருப்பேன்,
படும் வெயிலினை நிழலாய் நான் தடுப்பேன்.
ரோஜாவைக் கொஞ்சிடும் உன்னை
முள் குத்த முற்படும் போது, கையால் நான் மறைத்திடுவேன்,வலி
கூடப் பொருத்திடுவேன்.
உனக்காக நான் இருப்பேன்,
உனக்காகவே இறப்பேன்.
உதிரம் தான் தரக் கேட்டால்
அதிலும் நான் தந்திடுவேன்.
உயிரே உன் முகம் பார்த்து
உயிர்த் துரந்தும் வாழ்ந்திடுவேன்.
No comments:
Post a Comment