நூல்
நூல் ! அது
பாசக்கயிறு.
பட்டுப்பூச்சியின் கழுத்தைக்
கட்டிய இயமனின் கயிறு.
வர்ணம் பல வெளிப்படையாய் -கரும்
இருட்டின் நிறம் அதன் கண்ணில்!
நெய்தலின் ஓசை - ஒரு
உயிர் பிரியும் வலியின் ஓலம்!
உருக்கலில் அதன் கொதிப்பு,
ஊனமுறும் மனிதம் அங்கு!
உதிரம் இல்லாக் கொலையாகலாம்!
உடுத்தும்
உடையெல்லாம் அதன் பிரேதம்!
ஒரு
உயிரின் வலி துடைக்கப்படாமல்,
தொடர்கின்ற பலியிடல்கள்!
No comments:
Post a Comment