Wednesday, 12 July 2017

நூல்

   நூல்


  நூல் ! அது
  பாசக்கயிறு.
  பட்டுப்பூச்சியின் கழுத்தைக்
  கட்டிய இயமனின் கயிறு.

  வர்ணம் பல வெளிப்படையாய் -கரும்
   இருட்டின் நிறம் அதன் கண்ணில்!
  நெய்தலின் ஓசை  - ஒரு
  உயிர் பிரியும் வலியின் ஓலம்!

  உருக்கலில் அதன் கொதிப்பு,
  ஊனமுறும் மனிதம் அங்கு!
  உதிரம் இல்லாக் கொலையாகலாம்!
  உடுத்தும்
  உடையெல்லாம் அதன் பிரேதம்!

  ஒரு
  உயிரின் வலி துடைக்கப்படாமல்,
  தொடர்கின்ற  பலியிடல்கள்!

No comments:

Post a Comment