மனதுக்குள் என் குமுரல்!
இலை உதிர் பருவம்,
நினைவின்,
அலைகளின் ததும்பல்!
மழை எனப் பொழியும்
மிதக்கின்ற
நினைவதன் துகள்கள்!
விரல் கோர்த்த
சாலை உலாவல்கள்,
விளையாட்டில்
நீயும் நானும் மட்டும்.
![]() |
https://www.instagram.com/mkovalevskaya_ru/ |
I dedicate my poem for all of my friends. I miss you all and very badly miss my school days. Dear friends still I can remember that every moment I spent
பசுமை இழந்த இன்றில்
மருபடி ஒரு நேற்றைத் தேட...
பருவம் மாறிட உருவம் மாறிய
பள்ளி அறையும் ,
நீயும் நானும்...
இன்னும் ஒருமுறை
இழந்தைவை காண,
எட்டிப் பார்க்கும்
எந்தன் நெஞ்சம்!
வகுப்பறைக்குள் சுருண்டுகிடக்கிறது
இன்னும் மனது!
வரும்வரை காத்திருக்கும்
பிந்திய நொடிகள்!
மருபடி ஏங்கி நிற்கும்
மயங்கிய பார்வை!
மனதுக்குள் என் குமுரல்!
No comments:
Post a Comment