Friday, 7 July 2017

முதன் முதலாய்...

  முதன் முதலாய்...


  ஒரு சுவாசம்,
  ஒரு புன்னகை,
  ஒரு மெளனம்,



  முதன் முதலாய் நான் பார்த்த 
  இத சுவாசம்!
  முதன் முதலாய் நான் சிரித்த
  தித்திக்கும் புன்னகை!
   முதன் முதலாய் நான் சகித்த
   சுகமான மெளனம்!

   எல்லாமே ஒரு நொடி தான்.
    மனதுக்குள்,
     பூ மழையில் நனைந்துகொண்டு!

    சொல்லாத சந்திப்பு,
     சொட்டாத தேன்.
     ஒட்டிக்கொண்டு தரும் சுகத் தவிப்பு!
     
      ஒரே நொடி,
      ஒற்றைப் பார்வை,
       ஒரு ரோஜா -நான்
        திரு ராஜா!
      
         முதல் பார்வை அது...
        முத்துக்கள் தூவும் வேம்பு 
         மரத்தடி.
         ஜில்லென்று மெல்ல ஒரு காற்று.
         கொள்ளை போன எந்தன் பார்வை,-நான்
         களவாடியதோ, வெள்ளை ஓவியம்.

         திணர்ந்து போன மெளனம் எனக்குள்!
        திண்டியாக வார்த்தைக் கோர்வை,
        திருடப்பட்டது என் குரல்வளை!
        
        
       அமுதம் அருந்திய விழிகள் இன்னும்
       குமுதம் நில் என கேற்கத் தோற்றிட...-என்னை
       நகுதலாலே குத்திச் சென்ற
        பொகுவலாலே,
        நொடியில் களைந்தது பூ மழை.
     

குறிப்பு;திணர்தல்-இருகுதல்
   நகுதல்- பரிகசித்தல்
   பொகுவல்-ஒரு பறவை
   திண்டி-பருமன் கொண்ட/பிரமாண்ட
       
   

No comments:

Post a Comment