திரையுள் ஒழிந்த நீ...
தொடாமல் தொடும்
வானம் நீ.
தொடுகின்ற போது,
விடாமல் விட்டுச் செல்கிறாய்;
மேகம் நீ!
நிலாவில் படும் ஒளி
நீ!
தரிசித்தால் ஒளி மங்கப்
போர்த்திக்கொள்கிறாய்,
அடி நீ!
விழாமல் விழும் இலை
நீ!
விழுந்திடும் போது,
எழாமல் நின்று
உலாவும் காற்றெனை அலாதம் எனத்
தவிக்கவைக்கிறாய்!
வராமல் வரும் நெடும் தூரம் நீ
நெருங்கிடும் போது,
வராமல் நின்று
ஏக்கம் தருகிறாய்!
உராயும் உந்தன் நினைவில் மட்டும் ,
தராயாய் முளைத்து என்
நெஞ்சறை ஆழ்கிறாய்!
குறிப்பு : அலாதம்-கரி
No comments:
Post a Comment